கொழும்பின் கழிவு முகாமைத்துவ பிரச்சினை நாளாந்த தொந்தரவாக மாறியுள்ளது –
- நிரம்பி வழியும் குப்பை தொட்டிகள்,
- சட்ட விரோதமாக குப்பை கொட்டுதல்,
- தாமதமாகும் குப்பை சேகரிப்பு,
- பொதுமக்களின் பொறுப்பின்மை.
“தூய்மையான பாதைகள், சீரான அமைப்புகள்”
இந்த திட்டம் நகரின் கழிவு முகாமைத்துவத்தை நவீனமயமாக்க, நேரடி கண்காணிப்பு,
விரைவான தூய்மைப்படுத்தல் நடவடிக்கைகள், மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவை முன்னெடுக்கப்படும்.
பொதுமக்கள் பெருமை, நகரின் சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தூய்மையான நகரத்திலிருந்தே தொடங்குகிறது!
முக்கிய பங்காளிகள்
- கொழும்பு மாநகர சபை (CMC) – முக்கிய பொறுப்பு: குப்பை சேகரிப்பு, முகாமைத்துவம்.
- மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை (CEA) – சுற்றுச்சூழல் விதிகளை கண்காணிக்கும் அமைப்பு.
- தனியார் ஒப்பந்ததாரர்கள் – CMC உடன் இணைந்து குப்பை சேகரிப்பில் உதவும் நிறுவனங்கள்.
தற்போது நம்மிடம் உள்ள வசதிகள்
- குப்பை சேகரிக்கும் லாரிகள் – தற்போது கண்காணிப்பு இல்லாமல் செயல்படுகின்றன.
- வெள்ளவத்தை மாற்று நிலையம் – குப்பை சேர்த்து கொண்டு செல்லும் நகரத்தின் முக்கிய இடம்.
- அருவக்காடு (புத்தளம்) நில நிறப்பு தளம் – 170 கிமீ தூரத்தில் உள்ள இறுதி அகற்றல் நிலையம்.
- பொது இடங்களில் உள்ள குப்பை தொட்டிகள் – பல பகுதிகளில் முடங்கி செயலிழந்துள்ளன.
- குறுகிய அளவில் மட்டுமே மண்ணாய்வும் மீள் சுழற்சியும் நடைபெறுகிறது.
- நீர்வழிப்பு மற்றும் சுத்தம் செய்யும் குழுக்கள் – குப்பை முகாமைத்துவ குழுக்களுடன் ஒருங்கிணைப்பு குறைவாக உள்ளது.
உயர் அபாய பகுதிகள் (Red Alert Areas)
மாசுபாடு மிகுந்த மற்றும் தூய்மை இல்லாத பகுதிகள்:
தற்போது உள்ள நிலைமைகள்
- குப்பை சேகரிப்பு நடைமுறையில் உள்ளது, ஆனால் குறுகிய இடங்களிள் மற்றும் தாழ்த்தப்பட்ட பகுதிகளில் குப்பைகள் சேகரிக்கப் படவில்லை.
- ஒரே ஒரு அகற்றல் தளம் (புத்தளம்) மட்டுமே உள்ளதால், போக்குவரத்து செலவுகள் அதிகம்.
- பொது குப்பை தொட்டிகளில் குப்பை நிரம்பி வழிந்த போதிலும் சரியாக கவனிக்கப்பட வில்லை.
- குப்பை சேகரிப்பை நேரடியாக கண்கானிக்கும் கணினி அமைப்பு இல்லை.
- தனியார் ஒப்பந்ததாரர்கள் மற்றும் பணியாளர்களுக்கான கண்கானிப்பு குறைவாக உள்ளது.
- குப்பை முறையாக பிரித்து சேகரிக்கப்படாமல் இருப்பதால் மிள்சுழற்சி, மண்ணாய்வு கடினமாகிறது.
- கழிவுகளை சரியான முறையில் அகற்றுவது குறித்து பொது மக்களின் விழிப்புணர்வு குறைவாக உள்ளது.
நாம் மேம்படுத்தவிருக்கும் அம்சங்கள்
- GPS மூலம் குப்பை வண்டிகளை கண்காணித்து சேகரிப்பை துல்லியமாக்குதல்.
- பொது குப்பை தொட்டிகளை தினமும் பராமரித்து பழுது பார்க்குதல்.
- “தூய்மை மண்டலங்கள்” (Clean Zones) உருவாக்கி, சிசிடிவி கண்காணிப்பு, அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொண்டு சட்டவிரோத குப்பை கொட்டுதலை தடுக்கும் முறைமை.
- “கொழும்பு தூய்மையாக தொடங்குவது என்னிடமிருந்து” (Colombo Clean Starts with Me) விழிப்புணர்வு பிரச்சாரம்.
- நகர மேயரின் அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் மாதம் ஒருமுறை கழிவு முகாமைத்துவ ஆய்வு செய்யும் குழு நிறுவப்படல்.
- 10 மண்ணாய்வு நிலையங்கள் மற்றும் 5 மீள்சுழற்சி மையங்கள் – தனியார், அரசாங்க ஒத்துழைப்பின் கீழ் அமைக்கப்படும்.
- குப்பை சேகரிக்கும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், பயிற்சிகள், மற்றும் சுகாதார சோதனைகள் வழங்குதல்.
நாம் அறிமுகப்படுத்தவிருக்கும் புதிய அம்சங்கள்
- பொது பயன்பாட்டு செயலி (Public App)
- குப்பை சேகரிப்பு அட்டவணை, சேகரிக்கப்படாத பகுதிகள் மற்றும் துப்பரவுப் பணிகள் பற்றி கண்காணிக்கப்படும்.
- “Smart Bins” (உணரிகள் இணைக்கப்பட்ட குப்பை தொட்டிகள்)
- குப்பை நிறைந்ததும் நகர சபைக்கு தகவல் தெரிவிக்கும் வசதி.
- “Waste-to-Energy” ப்ளாண்ட் (கழிவுகளை மின் சக்தியாக மாற்றும் திட்டம்)
- குப்பை குவிக்கப் படுவதைக் குறைத்து, அதைப் பயன்படுத்தி நகரத்திற்கே புதிய மின் ஆற்றல் உருவாக்கும் திட்டம்.
- “Blocked Drain Reporting System” (கழிவு நீர் தடைப்படும் இடங்கள் பற்றி குடிமக்கள் புகாரளிக்கும் வசதி)
- தடைப்படும் இடங்களை புகைப்படம் எடுத்து பதிவேற்றல் மூலம் உடனடி நடவடிக்கைக்கு வழிவகுக்கும் முறைமை.
- “Business Waste Licenses” (வர்த்தக கழிவுகளை கட்டுப்படுத்த அனுமதிப் பத்திரங்கள்)
- ஹோட்டல்கள், சந்தைகள் போன்ற பாரிய கழிவு உற்பத்தியாளர்களை ஒழுங்குமுறைப்படுத்துதல்.
- பொது கண்காணிப்பு புள்ளிவிவர அட்டைகள் (Public Cleanliness Scorecards)
- பிரதேச வாரியாக தூய்மை நிலை மதிப்பீடு மற்றும் மதிப்பெண் வெளியிடுதல்.
- செயற்கை நுண்ணறிவு (AI) கொண்டு சிக்கல் இடங்களை கணித்தல் மற்றும் விரைவான நடவடிக்கைகள் எடுத்தல்.
- மாதாந்த நிலை புதுப்பிப்புகள் பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும்.
- நேரடி டாஷ்போர்டு மூலம் குப்பை சேகரிப்பு மற்றும் புகார்களின் நிலை கண்காணிக்கலாம்.
- அதிக தூய்மை கொண்ட பகுதிகளுக்கும், சிறந்த பணியாளர்களுக்கும் வெகுமதிகள் வழங்கப்படும்.
- சமூகக்கூட்டங்கள் மூலம் மக்கள் கருத்துக்களை கேட்டல் மற்றும் முன்னேற்றங்களைப் பகிர்தல்